திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் வரும் பக்தர்களுக்கு நீர்மோர் பானகம் வழங்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் உள்ள அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆணைப்படியும். தஞ்சை இணை ஆணையர் அறிவுரைபடியும் கோடை காலத்தை முன்னிட்டு திருக்கோயில் வரும் பக்தர்கள் தாகத்தை தணிக்க கடந்த 10தேதிமுதல் தினசரி பக்தர்களுக்கு நீர்மோர் மற்றும் பானகம் வழங்கப்பட்டு வருகிறது
7வது நாள் நிகழ்ச்சியில் திருக்கோயில் செயல் அலுவலர் இரா.விக்னேஷ் பக்தர்களுக்கு நீர் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை
திருக்கோயில் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து இருந்தனர்.
பாபநாசம் செய்தியாளர்
எஸ் மனோகரன்
CATEGORIES தஞ்சாவூர்
TAGS தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருக்கோயில் வரும் பக்தர்கள்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்