BREAKING NEWS

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் சித்திரை தேரோட்ட பெருந்திருவிழா – முத்து கொண்டை, கிளி மாலைகளுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.

108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக பார்க்கப்படுகிறது.

 

 

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் தை மாதம் புனர்பூச திருத்தேர்,பங்குனி கோரதம் என வேறு தேரோட்ட வைபவங்கள் நடைபெற்றாலும் பட்டித்தொட்டிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக சித்திரை தேரோட்ட விழா நடைபெறுகிறது.

 

 

இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் ஏப்ரல் 10ம்தேதி நடைபெற்ற நிலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய நண்பருமாள் திருக்கோவிலை வளம் வந்தார் – முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

 

புதுக்கோட்டை சிவகங்கை இராமநாதபுரம் திண்டுக்கல் சேலம் பெரம்பலூர் அரியலூர் தஞ்சை போன்ற எண்ணற்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவரங்கனின் திருத்தேரை கான குவிந்தனர்.

 

 

ரங்க ராஜா – ரங்கபிரபு கோவிந்தா என்கிற கோஷம் முழங்க எழில் மிகு தேரில் திருவரங்கண் பவனி வந்தார்

சரியாக 6.30மணிக்கு திருதேர் வடம் பிடித்தல் துவங்கியது – பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில் சுமார் 700 க்கு அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த திருவிழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்தும் வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திருவரங்கனை தரிசித்து சென்றனர்

CATEGORIES
TAGS