திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7லில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பர். தொடர்ந்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்து. பின்னர் கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி நடைபெறும் திருப்பணிகள், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் மணிவாசன், ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் பழனி, ஆட்சியர் க. இளம்பகவத், மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், பயிற்சி ஆட்சியர் புவனேஸ்வராம், தக்கார் அருள்முருகன், கோட்டாட்சியர் சுகுமாறன், வட்டாட்சியர் பாலசுந்தரம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.