திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் நூதனமுறையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் விவசாயிகள் செய்தனர்.
பெரம்பலூர் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திருவையாறு புறவழிச் சாலை அமைப்பதற்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் விவசாயிகள் தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நூதன முறையில் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் வாழை இலை, வாழைத்தார், நெல்மணிகள், நாற்று, தேங்காய் போன்றவற்றை கையில் ஏந்தி எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்,..
வயல்வெளிகளை நஞ்சை நிலங்களை கைப்பற்றி அமைக்கும் புறவழிச்சாலை எங்களுக்கு வேண்டாம் திருவையாறு கடைவீதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு துணை போகும் அரசு அலுவலர்கள் துணை போக வேண்டாம் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னோடி விவசாயி புனவாசல் சம்பந்தம் தலைமையிலும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை செயலாளர் சுகுமாறன் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை தெரிவித்தனர். பின்பு வட்டாட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.