BREAKING NEWS

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை – 5 வட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை – 5 வட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு செல்லக் கூடிய மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இடைவிடாது சாரல் மழை பெய்து வருகிறது.

இனைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 வட்டாரத்தை சேர்ந்த பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

தென்காசி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்து வருவதால் செங்கோட்டை தென்காசி கடையநல்லூர் கடையம், கீழப்பாவூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடுவதாக மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

Share this…

CATEGORIES
TAGS