தேனி சார் – பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தலைமயிலான குழுவினரின் சோதனையில் ரூ.21,670 கைப்பற்றப்பட்டது.

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே திட்டச்சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது தேனி சார் – பதிவாளர் அலுவலகம். நாள் தோறும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் அதிக அளவு லஞ்சம் கேட்பதாக தொலைபேசி மூலம் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமயில், ஆய்வாளர் ஜெயப்பிரதா உள்ளிட்ட ஆறுபேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை அதிரடியாக சார் – பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
சார் – பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், சார்பதிவாளர் சசிகலாராணி ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனை முடிவில் கணக்கில் வராத பணம் ரூபாய் 21,670 கைப்பற்றப்பட்டது. இதனால் தேனி சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர் தேனி – சதிஸன்.