BREAKING NEWS

தேனி மாவட்டத்தின் 18வது கலெக்டராகவும் 2வது பெண் கலெக்டராக சஜீவனா இன்று பொறுப்பேற்றார்.

தேனி மாவட்டத்தின் 18வது கலெக்டராகவும் 2வது பெண் கலெக்டராக சஜீவனா இன்று பொறுப்பேற்றார்.

 

மதுரை மாவட்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்து வந்த தேனி, கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாளன்று தேனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக தமிழ்நாடு அரசு பிரித்து உருவாக்கியது.

 

இதையடுத்து தேனி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு முதல் கலெக்டராக கடந்த 1997 ஆம் ஆண்டில் ஜனவரி 1ஆம் தேதி அன்று சத்திய கோபால் பொறுப்பேற்றார்.

 

அதனையடுத்து 15 வது பெண் கலெக்டராகவும் முதல் பெண் கலெக்டராகவும் பல்லவி பல்தேவ் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி பொறுப்பேற்றார்.

 

 

இதனையடுத்து 17 வது கலெக்டராக முரளிதரன், கடந்த 2021 ஜூன் மாதம் 16ஆம் தேதி பொறுப்பேற்றார்.

 

இந்த நிலையில் 17வது கலெக்டராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பதவி உயர்வு பெற்று சென்றதை தொடர்ந்து,

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த சஜீவனா பதவி உயர்வு பெற்று தேனி மாவட்டத்தின் 18 வது கலெக்டராகவும் இரண்டாவது பெண் கலெக்டராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

CATEGORIES
TAGS