BREAKING NEWS

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

 

அந்த மனுவில் கூறியிருப்பது புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கங்கனான்குளம், ஒடக்கரை, களக்காடு போன்ற பகுதிகளில் கஞ்சா எனும் போதை நடமாடிக்கொண்டிருக்கிறது.எனவே கல்லூரி மாணவர்களும்,

 

பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பது பொது மக்களின் கருத்து இது போன்ற கஞ்சா எனும் போதை பொருள்களை விற்பவர்களை தடுக்கும் விதமாக பொதுமக்களின் சார்பாகவும்,

 

எஸ்டிபிஐ கட்சியின் சார்பாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இது போன்ற போதை வியாபாரி களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

 

 

இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, மாவட்ட செயலாளர் எம்.எஸ் சிராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )