BREAKING NEWS

பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து திருச்சி அண்ணா சாலை அருகே ப.ஜ.க மலைக்கோட்டை மண்டல் சார்பில் ஆர்ப்பாட்டம்.

பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து திருச்சி அண்ணா சாலை அருகே ப.ஜ.க மலைக்கோட்டை மண்டல் சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி புத்தூர் நால்ரோடு பிஷப் கீப்பர் கல்லூரி அருகே கேளிக்கை விடுதி (பார்) திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

இது தொடர்பாக திருச்சி மாவட்ட பாஜக தலைவரும் அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளையும் காவல்துறை கைது செய்துசிறையில் அடைத்தது.

அதனை கண்டித்தும், பாஜக மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் உடனடியாக விடுவிக்கவும் கோரி திருச்சி மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணா சிலை அருகே மலைக்கோட்டை மண்டல் சார்பில் மணிமொழி தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மலைக்கோட்டை மண்டல் தலைவர் அரவிந்த் பிரகாஷ், துணைத் தலைவர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சிவராஜ், பொருளாளர் சதீஷ், செயலாளர் ராஜலட்சுமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் அனுமதி இன்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )