BREAKING NEWS

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

 

திருநெல்வேலி, பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீரை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

 

 

இதன் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி பாளையங்கோட்டை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் தூத்துக்குடி மற்றும் ஏரல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 86 107 ஏக்கர் நிலம் பாசன வசதி, பெறுகிறது.

 

இன்று திறக்கப்படும் தண்ணீர் 31.3.2023 முடிய 148 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சேரன்மகாதேவி, சப் கலைக்டர் சபீர் ஆலம் மற்றும் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் உட்பட பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி துறை பிரதிநிதிகள் உட்பட ஏராளமானவர்கள் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )