BREAKING NEWS

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளபள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறை.

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளபள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறை.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

 

 

பள்ளி மேலாண்மை குழுவின் உடைய செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை எவ்வாறு மேற்பார்வையிடுவது என்பது குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மேலாண் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

 

 இந்த பயிற்சிக்கு தலைமையாசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

 

 பயிற்சி பட்டறையில் வட்டார வள மைய பயிற்றுநர் திரு செல்வகுமார் அவர்கள் பயிற்சி கொடுத்தார்கள்.

 

இப் பயிற்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திரு நைனா முகமது துணைத் தலைவர் உலகம்மாள் ஆசிரியப் பிரதிநிதி திருமதி உமா மகேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி செய்திருந்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )