BREAKING NEWS

பேரணாம்பட்டில் கொள்ளைக் கூட்ட கூடாரமாக மாறிவரும் அரசு மாணவர். மாணவியர் விடுதிகள்.

பேரணாம்பட்டில் கொள்ளைக் கூட்ட கூடாரமாக மாறிவரும் அரசு மாணவர். மாணவியர் விடுதிகள்.

பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் அரசினர் மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. விடுதி காப்பாளராக. சசிகலா என்பவர் இருந்து வருகிறார்.

 

இந்த விடுதியில் 55 மாணவிகள் இருப்பதாக தகவல் பலகையில் உள்ளது. ஆனால் 20 மாணவிகள் இல்லை என்றும் விடுதி காப்பாளர் சசிகலா பொய்யான கணக்குகளை எழுதி அரசாங்கத்தை ஏமாற்றி பல தில்லுமுல்லு வேலைகளை செய்து பல்வேறு மோசடி செய்து வருவதாகவும்,

 

மத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியிலும் இதுபோன்ற தொடர்கதை ஆகி வருவதாகவும் இதுகுறித்து வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை அதிகாரி சீதாவும்,

 

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர். வெங்கட்ராமனும் நேரில் ஆய்வு செய்து உண்மை என தெரியவரும் பட்சத்தில் மேற்கண்ட 2 விடுதி காப்பாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் பேரணாம்பட்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS