பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா தா.வேலழகன் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் நகர அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளரும் வழக்கறிஞருமான L.சீனிவாசன் தலைமை தாங்கினார். நகர துணைச் செயலாளர் மா.சிவாஜி, மாவட்ட இணை செயலாளர் சந்திரா சேட்டு முன்னாள் நகர மன்ற உறுப்பினர் துரை திருமால் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் வேலூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் பா. வேலழகன் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில் பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் D. பரிதா, மாவட்ட அதிமுக பிரதிநிதி M. தேசமுத்து, வழக்கறிஞர்கள் R ஜெகன், S. சேட்டு, சதீஷ்குமார், R நாகப்பன், S. ஜெயக்குமார், முத்து சுப்பிரமணி S. இளையராஜா, R ராமு ராஜாமணி உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
TAGS அதிமுகஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பேரணாம்பட்டுபேரணாம்பட்டு நகர அதிமுகமுக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்