BREAKING NEWS

பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது:-

பொறையார் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது:-

முன்னாள் முதல்வர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் நிவேதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் கலந்து கொண்டு காமராஜர் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பெருந்தலைவர் காமராஜரை பற்றிய சிறப்புரையாற்றினார்.

பள்ளியின் மாணவ மாணவியர்கள் பள்ளியின் வளாகத்தில் 200 கார்ட்போர்ட் அட்டையை பயன்படுத்தி கர்மவீரர் காமராஜரின் திருவருவப்படத்தை வரைந்தும் அவரைப் போற்றும் வகையில் பேச்சு போட்டியில் கலந்து கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழில் அவரின் புகழை பேசினர்.

தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களை பேரூராட்சி மன்ற தலைவர் வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS