போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு; காவல் துறை கூடுதல் இயக்குநர் சங்கர் காட்பாடியில் பேச்சு.

மதுவை ஒழிக்க வேண்டும் அனைத்து போதை பொருட்களையும் ஒழிக்க வேண்டும் கலந்தாய்வு கூட்டத்தில் மாணவி கோரிக்கை..
வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் சரக காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் தலைமையில் நடைபெற்றது இதில் கிருஷ்ணாபொறியியல் கல்லூரியின் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாகனம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி ,மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு மைய காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் கிரன் ஸ்ருதி, கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகளும் பங்கேற்றனர் இக்கூட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக அனைவரும் உறுதி மொழியை ஏற்றனர்.
பின்னர் கூட்டத்தில் காவல்துறை கூடுதல் இயக்குனர் சங்கர் பேசுகையில் போதை பொருட்களை கட்டுபடுத்த தீவிரமாக கண்காணித்து வருகிறோம் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது இதனை கட்டுபடுத்த மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அப்போது தான் குற்றவாளிகளை கைது செய்ய முடியும் மேலும் நாம் போதை பொருட்களுக்கு எதிரான போரை தொடுத்து வருகிறோம்.
அதன் தேவையை குறைத்தால் பயன்பாடு முற்றிலும் நின்றுவிடும் ஆயிரக்கணக்கான டன் கஞ்சாக்களை பறிமுதல் செய்து படிப்படியாக கஞ்சாவை ஒழித்து வருகிறோம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் படிப்படியாக போதை பொருட்கள் ஒழிக்கப்பட்டு வருவதாக பேசினார்.
இக்கூட்டத்தில் கலந்துரையாடலின் போது கல்லூரி மாணவி ஒருவர் பேசுகையில் அனைத்து போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் சிறிய வயதுடைய மாணவர்கள் கூட இதனால் பாதிக்கபடுகின்றனர் அனைத்து போதை பொருட்களையும் ஒழிக்க வேண்டும் குறிப்பாக தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டுமென பேசினார் மாணவியின் இந்த பேச்சு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் அதிகாரிகளுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.