மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம்
சங்கராபுரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திலகவதி நாகராஜன் சொந்த ஊரான கொசப்பாடி கிராமத்தில் மக்களை தேடி மனுக்கள் பெரும் முகாமில் முண்டியடித்துக் கொண்டு உணவு பொட்டலம் வாங்கிய பொதுமக்கள், கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அதன் சுற்று வட்டார கிராமங்களான நெடுமானூர், சோழம்பட்டு, பொய்குணம், உட்பட பல்வேறு கிராமங்களில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது அப்போது..
கொசப்பாடி கிராமத்தில் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மனுக்களை பெற்று முடித்தவுடன் வேறொரு கிராமத்திற்கு மனுக்கள் பெற சென்று விட்டார் அப்போது பொதுமக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் கூட்டமாக ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு உணவு பொட்டலம் வாங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.