BREAKING NEWS

மக்கள் நீதி மைய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்.

மக்கள் நீதி மைய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்.

 

மக்கள் நீதி மைய்யம் கட்சியின் கடலூர் தென்மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வேப்பூர் லெமன் ஹோட்டலில் நடைபெற்றது.

 

 

இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் சிவ இளங்கோ (கட்டமைப்பு) தலைமை தாங்கினார், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் வைத்தீஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கணேசன் வரவேற்றார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பாக கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்துவது, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய கொடிக்கம்பங்கள் அமைப்பது, சுவர் விளம்பரம் போஸ்டர் பேனர் உள்ளிட்டவைகள் தயார் செய்வது,

 

 

மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதியிலும் தொகுதி வளர்ச்சி திட்டம் தயாரிப்பது, மக்கள் பணியில் ஈடுபடுவது, மாவட்டம் முழுவதும் ஆலோசனைக் கூட்டம் ஆர்ப்பாட்டம் செயற்குழு பொதுக்குழு போன்ற கூட்டங்களை கூட்டுவது தொடர்பாகவும் கட்சிக்கு நிதி திரட்டுவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப் பட்டது.

 

 

முன்னதாக, வேப்பூர் கூட்ரோட்டில் மக்கள் நீதி மைய்யத்தின் கொடி கம்பம் ஏற்றி சேவை பெரும் உரிமைச் சட்டம் உடனடியாக அமல்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது சம்பந்தமான துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

 

இக்கூட்டத்தில் மாநில இணை செயலாளர் ஜெய் கணேஷ், மாநில துணை செயலாளர் சண்முகராஜன், மாவட்ட துணை செயலாளர் வில்வம் செல்வகுமார்,

 

 

மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் எஸ் வி முருகன், இணை அமைப்பாளர் முருகன், ஒன்றிய செயலாளர் மாமன்னன், திட்டக்குடி நகர அமைப்பு செயலாளர் நல்லதம்பி, திட்டக்குடி நகர செயலாளர் செழியன், விருத்தாச்சலம் நகர அமைப்பு செயலாளர் வெங்கட கிருஷ்ணன்,

 

விருதாச்சலம் நகர செயலாளர் ஸ்ரீபிரியா, மங்கலம்பேட்டை பேரூராட்சி அமைப்பாளர் ஜே குமார், மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ், மண்டல அமைப்பாளர் லட்சுமணன் மற்றும் ஒன்றிய நிர்வாகி பூவனூர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )