மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர்.
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டறை,
பகுதி எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (57) .இவர் அதே பகுதியில் அதிகத்தூர் சாலையில் மளிகை கடை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் 5-ஆம் தேதி இரவு மது போதையில் வந்த 2 மர்மநபர்கள் மளிகை கடையில்
பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தர மறுத்துள்ளனர். இதனால் பணத்தை கொடுக்காமல் பொருள் தரமுடியாது என கடையில் உரிமையாளர்
ஆறுமுகசாமி கூறியுள்ளார்,
மேலும் அதனை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ஜெயவேலு மற்றும் மாலு ஆகியோர்கள் நான் யார் தெரியுமா எங்களிடம் பொருளுக்கு பணம் கேட்கிறாயா என்று சொல்லி கடையின் உரிமையாளர் ஆறுமுகசாமியை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
அப்போது கடைக்கு வந்த சிலர் ஆறுமுகசாமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,
மேலும் பலத்த காயம் ஏற்பட்ட ஆறுமுகத்தை மேல் சிகிச்சைக்காக தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,
இது குறித்து ஆறமுகசாமியின் மகன் தேன்ராஜ் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் குறித்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து 2 நாட்கள் ஆயினும் இது வரை தப்பிச்சென்ற நபர்களை கைது செய்யாததால் சென்னை நாடார் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை
விரைவில் கைது செய்யப்படும் என
இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் உறுதி அளித்தார்.
மாமூல் கேட்டு தர மறுத்ததால் தாக்கியவர்களை காவல் துறை கைது செய்யாவிட்டால் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப் போவதாகவும் வியாபாரிகள் எச்சரித்தனர்.https://youtu.be/DSijXJTIpmQ