மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சாலைகளில் காய்கறி கடை வியாபாரிகள் உடனடியாக உழவர் சந்தைக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பட்டமங்கலம் தெரு, மகாதான தெரு, பெரிய கடை வீதி, அண்ணா நகர், முல்லை தெரு ஆகிய பகுதிகளில் குப்பைகள் அள்ளும் பணியையும் பட்டமங்கலம் தெருவில் சாலைகளில் காய்கறி கடைகளை வைத்திருப்பவர்களை உடனடியாக அகற்றவும்,
அண்ணா நகர், முல்லை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று நகராட்சி மூலம் தினந்தோறும் குப்பைகள் அள்ளப்படுகிறதா என கேட்டறிந்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டேன். குறிப்பாக பட்டமங்கலம் தெரு சாலைகளில் காய்கறி கடைகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக நமது மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தள்ளுவண்டி கடைகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளேன்.
வணிகர்கள் கட்டிட பணிகளுக்கு பயன்படுத்தும் மணல்களை சாலைகளில் கொட்ட கூடாது. அண்ணா நகர், முல்லை தெரு, மகாதானார் தெரு, பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று நகராட்சி துறை மூலம் தினந்தோறும் குப்பைகள் தள்ளப்படுகிறதா என கேட்டு அறிந்து கொள்ளப்பட்டது.
பொதுமக்களும் தங்களுடைய குப்பைகளை தினந்தோறும் வீட்டின் வாசலில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. குப்பைகளை தினந்தோறும் நகராட்சி துறை மூலம் அள்ளுவதற்கு அறிவுறுத்தப்பட்டது. வணிகர்கள் வியாபாரிகள் தங்களுடைய குப்பைகளை கடைக்கு முன்பு குப்பைத்தொட்டையில் போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.