BREAKING NEWS

மயிலாடுதுறை பள்ளி மாணவகள் பால் பேட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் முதலிடம்.

மயிலாடுதுறை பள்ளி மாணவகள் பால் பேட்மிண்டன் போட்டியில் மாநில அளவில் முதலிடம்.

திண்டுக்கல் மாவட்ட பால் பேட்மிட்டன் அசோசியேஷன் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பால் பேட்மிட்டன் போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 40 குழக்கள் பங்கு கொண்டனர்.

 

அதில் மாநில அளவில் முதலிடம் மயிலாடுதுறை மாவட்டம், நீடூர் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு வெற்றிக்கான கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நஸ்ருல் பள்ளியில் இருந்து மாணவர்கள் கௌதம், தமிழ்ச்செல்வன், சூரிய பிரகாஷ், ரகுபதி, பாலமுருகன், பால பிரவீன், சரவணன், சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் முதல் பரிசினை பெற்று வந்தனர்.

 

இவர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பொருளாளர் ஏ.சலாவுதீன், தாளாளர் வி.இராமன், முதல்வர் ஆர்.சந்திரசேகரன், ஆசிரிய-ஆசிரியர்கள் மற்றும் இவர்களுக்கு பயிற்சி கொடுத்து அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர்கள் யூ. ராபின் மற்றும் சரவணகுமார் ஆகியோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Share this…

CATEGORIES
TAGS