மாசு அடைந்த நீரை குடிநீர் வினியோகம் செய்த பெரியகுளம் நகராட்சியை கண்டித்து ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையில் இருந்து மாசு அடைந்த நீரை குடிநீர் வினியோகம் செய்த பெரியகுளம் நகராட்சியை கண்டித்தும், செயற்கையாக குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்திய பெரியகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமாரை கண்டித்தும், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக மற்றும் அமமுகவினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓபிஎஸ் அணி ஆதரவு மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த அமமுகவினர் ஏராளமான கலந்து கொண்டனர்.
CATEGORIES அரசியல்