மானாமதுரை எம்எல்ஏ, நிதியிலிருந்து இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் கலை அரங்கத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
தற்போது அடிக்கல் நாட்டு விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் கிராமத்தாரின் முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழாவில் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி அடிக்கல் நாட்டு விழாவின் வானத்தை சுற்றி தீபாரனை காட்டினார்.
இதனைத் தொடர்ந்து முதல் செங்கலாக எம் எல் ஏ ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்களை வைத்து அடிக்கல் நாட்டினார் பிறகு அங்கு கலந்து கொண்ட கிராம பொதுமக்களும் கட்சி நிர்வாகிகளும் தனித்தனியாக பூஜை செய்தனர்.
இதனால் கிராம பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தா கலையரங்கம் தற்போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து எங்களுக்கு செய்து கொடுப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என கிராம பொதுமக்கள் கூறினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் திரு.செல்வராஜ் அவர்களும், ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும், விவசாய அணி திரு.காளிமுத்து அவர்களும், கழக முன்னோடிகளும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.