BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மலர்தூவி வரவேற்று மரியாதை செலுத்தினார் – ஏராளமான பொதுமக்கள் மாணவர்கள் வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியின் முன் நின்று செல்ஃப் எடுத்து மகிழ்ந்தனர்.

ஆண்டுதோறும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றது. முதலமைச்சர் உத்தரவின்படி குடியரசு அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் அலங்கார ஊர்திகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக அரசின் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி பொதுமக்களின் பார்வைக்காக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் முன்பு நிறுத்தப்பட்டது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மலர்தூவி வரவேற்று மரியாதை செலுத்தினார். முன்னதாக மயிலாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை கரகாட்டம் பரதநாட்டியம் நாதஸ்வர இசையுடன் கிராமப்புற இளைஞர்கள் இணைந்து தாரை தப்பட்டை முழங்க அலங்கார உறுதியை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வீர தீர செயல்கள் வாழ்க்கை வரலாறு எடுத்துரைக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பேருந்து நிலையம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்தி ஏராளமான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்ததுடன் தங்கள் செல்போன்கள் மூலம் செல்பி படம் எடுத்துக் கொண்டனர் மேலும் குழந்தைகளை வாகனங்கள் மீது அமர வைத்தும் குடும்பம் குடும்பமாக அலங்கார ஊர்தி முன்நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் அலங்கார ஊர்திகள் பார்வையிட்டனர். இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ளும் வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நாளை திருப்பத்தூர் மாவட்டம் செல்லவுள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )