BREAKING NEWS

மின் கம்பி அறிந்து விழுந்து நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்

மின் கம்பி அறிந்து விழுந்து நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்

தரங்கம்பாடி அருகே மின் கம்பி அறிந்து விழுந்து விபத்து அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து மயிலாடுதுறையில் சிகிச்சை பெற்று வருகிறார்:-

 

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நல்லிச்சேரி கிராமத்தில் கூடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு வயல்வெளிக்கு செல்லும் மின்கம்பம் ஒன்று பள்ளி அருகே அருந்து விழுந்து அங்குள்ள இரும்பு வேலியில் கிடந்துள்ளது. பிற்பகல் உணவு இடைவேளை போது இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்கு சென்ற நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவர் ரிச்சர்ட் என்பவர் இரும்பு வேலியை தொட்டுள்ளார் உடனடியாக மின்சாரம் பாய்ந்ததில் மாணவன் தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தான் சம்பவம் கேள்விப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக சங்கரன்பந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை செய்து ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS