முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க தடை! உயிர்நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க தடை! உயிர்நீதிமன்றம் உத்தரவு!
திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வேங்கைக்கால் பகுதியில் 1992-ம் ஆண்டு ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும், கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்க கூடாது” என கூறப்பட்டிருந்தது.
“சிலை வைப்பதாக கூறப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மே-19-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்” என நீதிபதிள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
“எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் கிரிவலம் பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும்” என்று கூறி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி ஜே.சத்தியநாராயண பிரசாத் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.