BREAKING NEWS

ராஜபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சுற்று சுவர் கட்டும் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அடிக்கல் நாட்டினர்.

ராஜபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் சுற்று சுவர் கட்டும் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் அடிக்கல் நாட்டினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு சாலையில் திருவள்ளுவர் நகர் அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுற்று சுவர் இல்லாத காரணத்தால் பாதுகாப்பற்ற நிலை இருந்து வந்தது.

 

எனவே பள்ளியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் 258 மீட்டர் தூரத்திலும், 5 அடி உயரத்திலும் சுற்று சுவர் கட்டப்பட உள்ளது.

 

 

இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் மற்றும் ஊராட்சி சேர்மன் சிங்கராஜ் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலா கவுன்சிலர்கள் நவமணி வள்ளிமயில்ராஜா காமராஜ் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாரிமுத்து.

 

 

ஒன்றிய துணை செயலாளர் ஜெயந்தி மாவட்ட பிரதிநிதி திருக்குமரன் இளைஞரணி துணைஅமைப்பாளர் மாரிமுத்து அங்குராஜ் ராமசுப்பு ரமேஷ் கதிரேசன் ஜூலியர்ஜீஜர், மாரி ஆசிரியப்பெருமக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு சுற்று சுவருக்கான அடிக்கல் நாட்டினர்.

ம. வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.

CATEGORIES
TAGS