BREAKING NEWS

வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்

வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ண மங்கலம் கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் அருகே உள்ள வீரப்பகவுண்டர் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்குள் இன்று அதிகாலை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை தோட்டத்தில் புகுந்தது.

இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் சத்தமிட்டதை தொடர்ந்து யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் வனத்துறையினர் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் அகழிகளை ஆழப்படுத்தியும் மின்வெளிகள் அமைத்தும் கொடுக்க வேண்டும் எனவும் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் முன் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

CATEGORIES
TAGS