BREAKING NEWS

வள்ளிமலை பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை..!

வள்ளிமலை பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பூஜை..!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணியசாமி திருக்கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு விசேஷ பூஜைகள் மூலவருக்கு நடைபெறுவது வழக்கம்.

 

 

இதே போல் நேற்று தமிழ் கடவுளாம் முருகப்பெருமானுக்கு சித்திரை முதல் நாள் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு மூலவர் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு விடியற்காலை முதலே அர்ச்சகர்கள் வேத மந்திரங்களும் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

 

 

இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் முன்னதாக வள்ளிமலை தேரடியில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.

CATEGORIES
TAGS