விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் பள்ளி மேலாண்மை குழு பிரமுகர் திரு தர்வேஸ் மைதீன் உள்ளிட்டர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
நன்றிஉரையினை அப்பளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி அவர்கள் ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் திரு சாம் நியூட்டன் திரு சார்ஜ் ஸ்டீபன் திரு சரவணன் திரு ஆரோக்கியஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி
