வேலூர், ஒடுக்கத்ததூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜையை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், அணைகட்டு தொகுதி ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளரும் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி னார்.
அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் P.வெங்கடேசன் துணை செயலாளர் திருமதி.L.மலர்விழி பேரூராட்சி செயலாளர் பெருமாள் ராஜா, பேரூராட்சி சேர்மன் திருமதி.சத்தியவதி பாஸ்கரன்,
பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள்,மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
CATEGORIES வேலூர்
