அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- தஞ்சாவூர் மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய “கண்தானம் விழிப்புணர்வு பேரணி”.

டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை- தஞ்சாவூர் மற்றும் கிங்ஸ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய “கண்தானம் விழிப்புணர்வு பேரணி” தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி, ஆற்றுப்பாலம் – ரயில் நிலையம் வழியாக சென்று அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் நிறைவடைந்தது.

இவ்வூர்வலத்தை டாக்டர்.சாந்தி தலைமை மருத்துவர் , டாக்டர்.ராஜேந்திரன் கிங்ஸ் கல்லூரி செயலாளர் மற்றும் திருமதி.அற்புத விஜயசெல்வி கிங்ஸ் கல்லூரி முதல்வர், கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இவ்வூர்வலத்தில் சுமார் 250 மாணவர்கள், அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திரு.அன்புச்செல்வன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்.
CATEGORIES தஞ்சாவூர்
