BREAKING NEWS

அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு.

அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு.

திருச்சி மாவட்டம், அந்தமானில் நடந்த சர்வதேச பாரம்பரிய சிலம்பாட்ட சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு திருவெறும்பூர் பகுதியில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

அந்தமானில் கடந்த 28ம் தேதி நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பபோட்டியில் திருச்சியில் இருந்து 27 மாணவ மாணவிகள் உட்பட தமிழகம் சார்பில் 70 பேர் கலந்து கொண்டனர். 

 

 

இதில் திருச்சியில் இருந்து பல்வேறு பிரிவில் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.

 

இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழக மாணவ, மாணவிகள் பெற்றனர். 

 

 

அப்படி பதக்கங்களை வென்று வீடு திரும்பிய திருச்சி மாணவ மாணவிகளுக்கு திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் பகுதியில் மேளதாளங்கள் முழங்க

 நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்றனர்.

 

CATEGORIES
TAGS