BREAKING NEWS

அந்தியூரில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது 186 மது பாட்டில்கள் பறிமுதல்.

அந்தியூரில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது 186 மது பாட்டில்கள் பறிமுதல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக பவானி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது 

 

துணை காவல் கண்காணிப்பாளர், உத்தரவின் பேரில் அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை காவலர்கள் சரவணன். மாதேஷ். ஆகியோர் தவிட்டுப்பாளையம் மற்றும் பிரம்மதேசம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டு இருந்தனர்

 

 அப்பொழுது பிரம்மதேசம் பாலம் அருகில் நகலூர் குண்டு புளியமரம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மது பாட்டில்களை விற்பனை செய்து வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அவரிடம் இருந்து 86 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

 இதே போன்று தவிட்டுப்பாளையம் அரசு மதுபான கடை அருகில் மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பழனிச்சாமியை கைது செய்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )