அந்தியூரில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்துமாரியம்மன் கோவில் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அந்தியூர் நகரச் செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார்.
இந்த வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் செங்கோட்டையன் மாநிலத் துணைத் தலைவர் எஸ் எல் பரமசிவம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் சி ஆர் கோபால் பசுமைத்த தாயகம் ராஜேந்திரன் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் திருமுருகன் முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு இன்னுயிர் நீத்த தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ் நடராஜ் பிரம்மதேசம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி தெற்கு ஒன்றிய செயலாளர் ஓசை ஆறுமுகம் தெற்கு ஒன்றிய தலைவர் சேகர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.
