BREAKING NEWS

அந்தியூரில் காணாமல் போன பள்ளி மாணவனை கண்டுபிடித்து தர கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.

அந்தியூரில் காணாமல் போன பள்ளி மாணவனை கண்டுபிடித்து தர கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் காளிதாஸ் காலனியைச் சேர்ந்தவர் செந்தில் சியாமளா தம்பதியர் மகன் ஜெகத்ரட்சகன் வயது 14 இவர் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் ஜெகத்ரட்சகனை பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் ஜெகத்ரட்சகன் கண்டுபிடிக்க முடியவில்லை,

 

இதுகுறித்து மாணவனின் பெற்றோர் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜிடம் மாணவனை கண்டுபிடித்து தரக்கோரி புகார் மனு அளித்தனர் இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவனை தேடி வருகின்றனர்.

 

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

CATEGORIES
TAGS