அந்தியூரில் சுவர் ஏறி குதித்து வீட்டில் திருடிய பெண் கைது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூபதி இவர் தனது குடும்பத்துடன் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது வீட்டில் உள்ளே லைட் எரிவதை பார்த்து பூபதி அங்கு சென்று பார்த்த பொழுது,..
ஒரு பெண் வீட்டில் பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் பணம் ஐம்பதாயிரம் ரூபாய் எடுத்து தனது சேலையில் மறைத்து வைத்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவரை கையும் களவுமாக பிடித்து அந்தியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அப்பெண் அந்தியூர் மீனவர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுமதி வயது 40 என்பது தெரியவந்தது உடனடியாக போலீசார் சுமதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்னர்.
மேலும் இப்பெண் வேறு ஏதாவது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.