BREAKING NEWS

அந்தியூர் அருகே வனப்பகுதியில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்.

அந்தியூர் அருகே வனப்பகுதியில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.

 

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் பெரிய செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் வயது 70 இவர் இன்று மாலை தனது உறவினர் வீட்டுக்கு மாக்கம்பாளையம் செல்வதற்காக வனப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்பொழுது வனப்பகுதியில் புதர் மறைவில் நின்று இருந்த கரடி திடீரென வீரப்பனை தாக்கியது இதனால் படுகாயம் அடைந்த வீரப்பனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

அந்தியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )