BREAKING NEWS

அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.

அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அறக்கட்டளை நிர்வாக தலைவர் வி ஆர் பார்கவி தலைமை ஆற்றினார் பொருளாளர் S.லட்சுமி நரசு முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கூடலரசன் சிறப்புரையாற்றி ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சோழபுரம் கோவில் குளம் பிரம்மதேசம் ஆகிய பகுதியில் இருந்து 11 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 1500 ரூபாய் வீதம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS