BREAKING NEWS

அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் இடி தாக்கி விவசாயி பலி.

அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் இடி தாக்கி விவசாயி பலி.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் உள்ள தோனித்துறையைச் சேர்ந்தசீவலமுத்து மகன் சின்ன ராஜா (36)விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று மாலையில்வீட்டிலிருந்து ஆற்றுக்கு குளிக்க நடந்து சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது தனது செல்போனில் போன் வரவே எடுத்து பேசும் பொழுதுதிடீரென இடி தாக்கி சம்பவ இடத்திலே பலியானார். குளிக்க சென்றவர் இடி தாக்கி பலியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இது குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த சின்ன ராஜா உடலை கைப்பற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS