அம்பையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலி பண இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அம்பை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் மகாதேவன், புஷ்பா, உஷா மாலதி,பாரதி காந்தி, ஆண்டோ ராஜேஷ்,சபரிகிரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.நிர்வாகி அமுதா நன்றி கூறினார்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அம்பாசமுத்திரம்அம்பாசமுத்திரம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்அம்பாசமுத்திரம் தாலுகாஅரசு காலி பண இடங்களை நிரப்புதல்ஜாக்டோ ஜியோ மனித சங்கிலி போராட்டம்தமிழ்நாடுதமிழ்நாடு அரசு துறைதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்குதல்முக்கிய செய்திகள்