அம்பை நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளார்கள் மணிமுத்தாறு 12ஆம் அணி பட்டாலியன் இனைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவிலில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி வரை புகையில்லா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அம்பை நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளார்கள் மற்றும் மணிமுத்தாறு 12ஆம் அணி பட்டாலியன் பயிற்சி காவலர்கள் இனைந்து இந்த பேரணியை நடைத்தினர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் போகி பண்டிகையும் ஒன்று. – “பழையன கழிதலும் ,புதியன புகுதலும் வழுவென மறவே ” என்ற முதுமொழிக்கேற்ப இந்துக்கள் தங்களது பழைய பொருட்களை எரித்து விட்டு தமிழர் திருநாளாம் தை முதல் நாள் அன்று புத்தாடை அணிந்து பொங்கல் கொண்டாடி மகிழ்வது என்பது தொன்று தொட்டு வரும் விழாவாகும்.
மார்கழி கடைசி நாளான சனிக்கிழமை போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நன்நாளில் இந்துக்கள் பயன்படுத்தி வந்த அனைத்து பொருட்களும் பழையது என்பதால் அவற்றை எரிப்பதும், டயர்கள். ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரித்துவருவது வழக்கம்.
இந்த பழக்கம் சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்புள்ளாக்குகிறது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு சுவாச கோளாறுகள், இருமல், நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
இந்த காரணிகளை பொதுக்கள் களைய வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தளவாய் கார்த்திக்கேயன், அம்பை நகராட்சி ஆனையாளர், நகர்மன்ற தலைவர் பிரபாகரன், நகர வியபாரிகள் சங்க தலைவர் பன்னை சந்திர சேகர், மற்றும் பலர் கலந்து கொண்டு புகையில்லா போகி விழிப்புணர்வு துண்டு பிரசுரம், ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.