BREAKING NEWS

அரியலூர் – தமிழ்நாடு நாள் புகைப்பட கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆர்வமுடன் பார்வையிட்டார்.

அரியலூர் – தமிழ்நாடு நாள் புகைப்பட கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆர்வமுடன் பார்வையிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரியலூர் தாலுக்கா அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற தமிழ்நாடு நாள் விழா பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

தமிழ் மொழியின் சிறப்புகள் தமிழ்நாட்டின் பாரம்பரியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர் தாலுக்கா அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பேருந்து நிலையம் நகராட்சி அலுவலகம் ஜெயங்கொண்டம் சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு நாள் விழா புகைப்பட கண்காட்சியை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார் புகைப்பட கண்காட்சியில் மெட்ராஸ் வரலாறு, மெட்ராஸ் மாநில வரைபடம், மெட்ராஸ் மாகாணம் – மறு சீரமைப்பு தமிழ்நாடு என பெயர் மாற்றம்,

மெட்ராஸ் மாகாணத்தின் வரைபடம், புனித ஜார்ஜ் கோட்டை, மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த மாவட்டங்களின் வரைபடங்கள் தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது இதனை பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என பலரும் பார்த்து ரசித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS