BREAKING NEWS

அரியலூர்- வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.

அரியலூர்- வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்துகொண்டார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், வாரணவாசி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டார்.

முதலமைச்சர் அவர்களின் காணொளி உரை மின்னணு திரையின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செய்தி – மக்கள் தொடர்புத்துறையின் விடியல் பயணம் – மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து போக்குவரத்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான்முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த விழப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் மற்றும் திட்டபணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS