ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஜெய்னுல் யாஸ்மின், முதல்வர் சையது அலி பாத்திமா முன்னிலை வகுத்தனர்.
இந்த பள்ளி 50 ஆண்டுகள் பழமையானது. ஆன்மிக சிந்தனையாளர் ஆடிட்டர் ஜமால் கனி மூலம் கிராமப்புற பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பள்ளியில்
1976 ம் ஆண்டு முதல் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பொன் விழாவாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் தங்களின் பள்ளி பருவ காலத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பேசி மகிழ்ந்தனர். நிகழ்ச்சி இடையில் 90 கிட்ஸ், 20 கிட்ஸ் என பிரித்தனர். மேலும் செய்திதாள், அஞ்சல் அட்டை, சக்திமான் போன்ற நினைவலைகளை கூறினர்.
முன்னாள் மாணவர்களின் புகைப்பட ஆல்பங்கள் உள்ளிட்டவை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளியின் முன்னாள் மாணவர் nவாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர் மகேந்திரன் வழங்கப்பட்டது.
டாக்டர் முகமது சாஹித்,கனடா பொறியாளர் சுபாஷ், இங்கிலாந்து பணிபுரியும் முகம்மது முக்தார், அரசு மகப்பேறு மருத்துவர் சபீதா மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
கடந்த 50 ஆண்டுகளுக்கு பின் நாங்கள் சந்திக்கும் நிகழ்ச்சி வாழ்வின் பொன்னாள் நல்வழிப்படுத்திய ஆசிரியர்களால், உயர்ந்த நிலையை அடைந்துள்ளோம். நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என 3 லட்ச ரூபாய் செலவில் நூலக புத்தகம், கணிணிகள் வழங்கினர்.
முன்னாள் ஆசிரியர்கள் உமாபதி, மாலா, மைதிலி, சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முக நுால், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக
வலைதளங்களில் ஒருங்கிணைத்ததில் 500 பேர் ஒன்று கூடியுள்ளோம் எனவும் பழைய நினைவுகளை கலந்து பேசி மகிழ்ந்தோம் என முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.