BREAKING NEWS

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை திருடியவர் கைது – ரூபாய் 85,000/- மதிப்புள்ள ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மீட்பு.

ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை திருடியவர் கைது – ரூபாய் 85,000/- மதிப்புள்ள ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம்:

திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் குறிஞ்சி நகரை சேர்ந்த நாராயணன் மகன் காளிராஜன் (47) என்பவர் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ராஜ் கண்ணா நகரில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 15.03.2023 அன்று இரவு இந்த ஒர்க்ஷாப்பிற்குள் புகுந்த மர்மநபர் அங்கு இருந்த ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை திருடிச் சென்றுள்ளார்.

 

 

இதுகுறித்து மேற்படி காளிராஜன் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காயல்பட்டினம் மன்னராஜா கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மாதவராஜ் (37) என்பவர் மேற்படி காளிராஜனின் ஒர்க்ஷாப்பிற்க்குள் புகுந்து அங்கு இருந்த ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை திருடி சென்றது தெரியவந்தது.

 

உடனே மேற்படி போலீசார் எதிரி மாதவராஜை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 85,000/- மதிப்புள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS