ஆண்டிபட்டி அருகே வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும் வேளாண்மை ஆராய்ச்சி பணிகளை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆய்வு செய்தார் .
பின்னர் புதிய தரை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
மேலும் புதுப்பிக்கப்பட்ட விதை சேமிக்கும் கிடங்கை திறந்துவைத்தார். தொலை தொடர்பு இயக்ககம் மூலம் பயிற்சி பெற்ற 25 பயனாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மதன் மோகன் மற்றும் சக விஞ்ஞானிகள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தொலை தொடர்பு இயக்குனர் முனைவர் பாலசுப்ரமணியம், முனைவர் ராஜமாணிக்கம், மக்கள் தொடர்பு அதிகாரி முனைவர் ராஜவேல் உடன் இருந்தனர்.
CATEGORIES தேனி
TAGS ஆண்டிபட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்முக்கிய செய்திகள்வேளாண்மை ஆராய்ச்சிவைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்