BREAKING NEWS

ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.

ஆபத்தான நிலையில் இருந்த  நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.

எடப்பாடி அரசு மருத்துவமனையில் இரத்தக்குழாய் பாதிப்பில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிருக்கு பாதிப்பு இல்லாமல் அரசு மருத்துவர்கள் சாதனை.

 

சேலம் மாவட்டம் எடப்பாடியை பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பவர் தனது வலது காலில் இரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு கால்கள் அழுகிய நிலையில் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் இமாம் Ms Ortho விடம் ஆலோசனை பெற்றுள்ளார்.

 

 

இதனை தொடர்ந்து, அவரை சோதனை செய்து பார்த்ததில் அவருடைய வலது காலில் இரத்தக்குழாய் பாதிப்பால் கால்கள் அழுகிய நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

 

அதனை தொடர்ந்து, மருத்துவ அலுவலர் Dr.செந்தில்குமாரிடம் அனுமதி பெற்று Dr இமாம் Ms Ortho தலைமையிலான மருத்துவ குழுவினர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக அவருடைய வலது காலில் ஏகே ஆம்புடேசன் எனும் பாதிக்கப்பட்ட முட்டிக்கு மேல் அறுவை சிகிச்சை செய்து அழுகிய பகுதியை அகற்றி நோயாளியின் உயிரை காப்பாற்றி உள்ளனர், இது குறித்த செய்தியாளைகளிடம் பேசும்போது,.

 

இதற்கு முன்பாகவே Dr இமாம் MsOrtho தலைமையிலான மருத்துவ குழு எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஏழை கூலித்தொழிலாளிக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும், பெண் கூலித்தொழிலாளி ஒருவருக்கு எலும்பில் புற்றுநோய் கட்டியை அகற்றி உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கு மருத்துவமனையிலேயே மருத்துவ காப்பீடு அட்டை ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )