BREAKING NEWS

ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே மதனஞ்சேரி கிராமத்தில ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் தலைமையில் நடைபெற்றது.

 

இதில் ஊராட்சி குழு மாவட்ட துணை தலைவர் என்.பிரியதர்ஷினி ஞானவேலன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் பெருமாள், ஒன்றிய அவை தலைவர் எம்.சி.ராமநாதன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் தோ.குமார், வி சோபா வெங்கடேசன், லட்சுமி பொன்னம்பலம், ஒன்றிய பொருளாளர் தசரதன் மாவட்ட பிரதிநிதிகள் வி.ஜி அன்பு, சி.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன் அனைவரையும் வரவேற்றார்.

 

இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் கனல் சுப்பிரமணி கலந்து கொண்டு திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை குறித்து விளக்கி பேசினார்.கூட்டத்தில் ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, ஒன்றிய குழு உறுப்பினர்கள்,

ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வி.எம். பெருமாள் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS