BREAKING NEWS

ஆலங்காயம் அருகே வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

ஆலங்காயம் அருகே வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரி அரசு பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

 

இதில் ஜோலார்பேட்டை எம்.எல். ஏ.தேவராஜி,ஆம்பூர் எம்.எல். ஏ வில்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், இல்லம் தேடி மருத்துவ பெட்டகம் வழங்கினர்.

 

 

இதில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார்,திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், ஒன்றியக்குழுத் தலைவர் சங்கிதாபாரி, ஒன்றிய குழு துணை தலைவர் பூபாலன்,தலைமை பொதுகுழு உறுப்பினர் வி.எம்.பெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சாவித்திரி மகேந்திரன், பமிதா ஆசிப், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், ஒன்றிய நிர்வாகிகள் தசரதன், வெங்கடேசன், வி.ஜி.அன்பு, குமார், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் மற்றும் மருத்துவ குழுவினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Share this…

CATEGORIES
TAGS