BREAKING NEWS

இடி மின்னல் தாக்கியதில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பணம், நகை, உடமைகள் தீக்கரையானது.

இடி மின்னல் தாக்கியதில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பணம், நகை, உடமைகள் தீக்கரையானது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் விபி அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்குன்றம் பகுதியில் நேற்று மாலை இடி மின்னல் தாக்கியதில் மாதேஸ்வரன் என்பவரது கூரை வீடு எரிந்தது.

 

வீடு தீப்பற்றி எரிந்ததில் ரூபாய் 1 லட்சம் பணமும், 4 பவுன் தங்கமும், விவசாய கருவிகள் மற்றும் வேர்க்கடலை 10 மூட்டைகள், 40 சிமெண்ட் மூட்டைகள் எரிந்து தீக்கரையானது.

 

சம்பவம் அறிந்த சங்கராபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் தா. உதயசூரியன் தீப்பற்றி எரிந்த வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அளித்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருள்கள் அரிசி, மளிகை சாமான்கள், போர்வைகள் ஆகியவற்றை வழங்கினார்.

 

நிகழ்வின் போது உடன் அங்கையர் கன்னி மாநில மகளிர் அணி துணைச் செயலாளர், அருள்மொழி மாநில பொதுக்குழு உறுப்பினர், சின்னசேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு மணிமாறன், சின்னசேலம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கோமதி குமார், சின்ன சேலம் தாசில்தார் வளர்மதி,

 

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, விபி அகரம் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி பாண்டியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தனம் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன்,மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS